Tuesday, June 15, 2010

உரைக்காத உளரல்கள்..

விடியாத இரவை யாசித்தே
விழித்திருந்த இரவுகள் பல
மறையாத பகலவனை யாசித்தே
தொலைத்த கனவுகளில் பல .௦..

பித்தனிவன் என்று பிதற்றிய
பேதை இதழ்கள் பல
அறிந்தும் அறியாதது போல
நகர்த்திய நாட்கள் பல

உனையெண்ணியே இவையென உரைக்காமல்
உறையவிட்ட தருணங்கள் பல
இமையாடாமல் உன்னை பார்த்தே
இயற்றிய காவியங்கள் பல

விழிகளில் வினிவியவனக்கு நீ
வழங்காத விடைகள் பல
மௌனத்தையே மொழியாய் கொண்டு
எனைவென்ற தினங்கள் பல

வேண்டியவை பலவாயினும்
உன்னிடத்தில் விரும்பியவை சில
உரைக்காமல் போயினும் அதையாசித்தே
எடுப்பேன் பிறவிகள் பல..